313367221 548003370667870 663177856868936352 n
இந்தியாஇலங்கைஉலகம்செய்திகள்

இந்தியப் பெருங்கடலில் மீண்டும் ‘யுவான் வாங் 6’!!

Share

கடந்த ஓகஸ்ட் மாதம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 (YW5) இன் சகோதர கப்பலான யுவான் வாங் 6 (YW6) இந்தோனேசியாவின் லோம்போக் ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் (HIP) சீன அரசுக்கு சொந்தமான கப்பலை நிறுத்த அனுமதிப்பது குறித்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது, இதன் காரணமாக, ஒரு இராஜதந்திர மோதல் உருவானது.

Open Intelligence ஆய்வாளர்கள் மற்றும் MarineTraffic வரைபடங்களின்படி, யுவான் வாங் 6 நேற்று (5) மாலை இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது .

யுவான் வாங் 6 இந்தியப் பெருங்கடலுக்குள் செல்வது இது முதல் முறையல்ல. இந்த கப்பல் 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு இந்தியப் பெருங்கடலில் நங்கூரமிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த கப்பல் குறித்து இந்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக இந்தியாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

யுவான் வாங் 6 கப்பல் இந்தியப் பெருங்கடலுக்கு வருவதை இந்தியாவோ அல்லது இலங்கையோ இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...