arrest 700x375 1
செய்திகள்இலங்கை

முள்ளிவாய்க்காலை சேர்ந்த பெண் கைது!

Share

முள்ளிவாய்க்காலை சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரி பகுதியில் தங்கி வந்துள்ளபெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சட்டவிரோதமான முறையில் கள்ளத்தோணியில் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு தப்ப முயன்றுள்ளார். இந்த வேளையிலேயே குறித்த பெண் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார் .

முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த சிவனேசன் கஸ்தூரி என்ற 18 வயது இளம் பெண்ணே தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள இரண்டாம் மணல் திட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்று தகவல்கள் தெரிவித்தன.

இறுதிப் போரின் பின்னர் இலங்கையில் இருந்து கஸ்தூரி தமிழகம் வந்து அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்துள்ளார். அங்கு ஒருவருடன் காதல் வசப்பட்டுள்ளார். மீண்டும் இலங்கை திரும்பிய அவர், காதலனைச் சந்திப்பதற்காக 2018ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னைக்குச் சென்றுள்ளார் என்று கூறப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட பெண் ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...