un 1
செய்திகள்அரசியல்இலங்கைஉலகம்

உக்ரைன், ரஷ்யா போரால் ஜெனிவாவில் இலங்கைத் தமிழர்களுக்கு பாதிப்பா?

Share

“போரை உடன் முடிவுக்கு கொண்டுவருமாறு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு சில நாட்களுக்கு முன்னரே ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் மூண்டது. அது தொடர்பிலேயே அனைவரினதும் கவனம் திரும்பியது. ஐ.நா. மற்றும் அதன் கிளை அமைப்புகளின் பார்வையும் திரும்பின. அவ்வாறு கவனம் செலுத்தப்பட வேண்டியது மேற்படி அமைப்புகளின் கடப்பாடும்கூட.

எனவே, இப்படியான நிலையில் இலங்கைத் தமிழர் விவகாரம், மனித உரிமைகள் பேரவையில் கவனிப்பாரற்று போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் அந்த அச்சத்தை போக்கும் விதத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் மிகவும் கடுமையானதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கை குறித்து மார்ச் 03 ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளது. இதன்போது உறுப்பு நாடுகளின் நிலைப்பாடுகளையும் அறியலாம்.

அதேவேளை, நாம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள். போரின் வலி நன்கு புரியும். எனவே, போரை நிறுத்துமாறு உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார் எம்.ஏ. சுமந்திரன்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...