155815508a5b210b9af83c492ed00598 XL
செய்திகள்அரசியல்இலங்கை

ஜே.வி.பி – சுதந்திரக்கட்சி கூட்டணி உருவாகுமா?

Share

” ஜே.வி.பியும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் கூட்டணி அமைப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர வெளியிட்ட அறிவிப்பானது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். இது கட்சியின் நிலைப்பாடு அல்ல.” என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

தூய்மையான அரசியல் கட்சிகளான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஜே.வி.பியும் கூட்டணி அமைக்கலாம் என சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிட்டிருந்தார்.

இது   தொடர்பில் பதிலளிக்கையிலேயே சு.கவின் மற்றுமொரு உறுப்பினரான லசந்த அழகியவன்ன இவ்வாறு கூறியுள்ளார்.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு தாம் தயாரில்லை என ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

எனினும், அக்கட்சிக்கு ஆதரவு வழங்கும் மக்கள் தம்முடன் இணையலாம் என அக்கட்சி அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...

bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...

கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...

பேருந்து கவிழ்ந்து விபத்து
இலங்கை

பேருந்து கவிழ்ந்து விபத்து – மஹகொடையாய பகுதியில் சம்பவம்!

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று புத்தல –...