1605930342 All SLTB buses in operation this weekend L
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடக்கிடம் கடன் கேட்கும் மத்திய போக்குவரத்து சபை!!

Share

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியத்திலுள்ள 7 சாலைகளிலும் உள்ள நிலையான வைப்பு பணத்தில் 150 மில்லியன் ரூபாவை கடனாகத் தமக்கு அனுப்பி வைக்குமாறு போக்குவரத்து சபையின் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து வடபிராந்திய முகாமையாளர் 7 சாலைகளுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியையடுத்து வடபிராந்திய சாலைகளில் இவ்வாறு நிதி கோரப்பட்டுள்ளது. இந்த பணத்தினை 10 தவணைகளில் மீள வழங்குவதாக தலைமையகம் உத்தரவாதமளித்துள்ளது.

எனினும் வாகன உதிரிபாகங்களின் நெருக்கடி நீடிக்கும் நிலையில் சாலைகளில் உள்ள வைப்புப் பணத்தினை தலைமையகத்துக்கு மாற்றவேண்டாம் என வடபிராந்திய இ.போ.ச. தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Lightning
இலங்கை

அம்பாறையில் மின்னல் தாக்கியதில் முற்றாக அழிவடைந்த வீடு.

நேற்று மாலை பெய்த பலத்த மழையின் போது அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில்...

kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...