76029f91 439d3e2f f1636930 basil
செய்திகள்அரசியல்இலங்கை

ஆயுதக் கொள்வனவுக்கு எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது? – பஸிலை நோக்கி பாயும் கேள்விக்கணைகள்!

Share

” போர்காலத்தில் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதற்கு சீனா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் முன்வந்திருந்த நிலையில், எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்தும், ஆயுதக் கொள்வனவுக்காக ஏன் கறுப்பு பணம் பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பிலும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜீர அபேவர்தன வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” போர் காலத்தில் ஆயுதம் கொள்வனவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பானது தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச தளத்திலும் தாக்கத்தை செலுத்தக்கூடிய விடயமாக அமைந்துள்ளது.

போரின்போது கறுப்பு பணத்தை பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதம் கொள்வனவு செய்யப்பட்டது என நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்து சர்வதேசத்துக்கு நம்பிக்கை இல்லாத நிலையில், நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பானது, சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, எம்மால் எழுப்படும் 4 கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் அவர் உரிய விளக்கத்தை விரைவில் வழங்க வேண்டும்.

1. ஆயுதக் கொள்வனவுக்கு எதற்காக கறுப்புப் பணம் பயன்படுத்தப்பட்டது?

2. போர் நடவடிக்கைக்கு நிதி தேவையெனில் நாடாளுமன்றம் ஊடாக பெற்றிருக்கலாம். எனவே, நிதி பெறப்பட்ட வழிமுறைகள் மற்றும் இடங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தல் அவசியம்.

3. சீனா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆயுதம் வழங்குவதற்கான ஒத்துழைப்பை வழங்கிவந்த நிலையில், எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது?

4. வடகொரியாவில் இருந்து வாங்கப்பட்ட ஆயுதங்கள் எவை? அவை உரியவகையில் தரவுக் கட்டமைப்பில் பதிவுசெய்யப்பட்டனவா?

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...