ranjith
செய்திகள்அரசியல்இலங்கை

மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு ஏன் அஞ்சுகின்றது?

Share

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு ஏன் அஞ்சுகின்றது, தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார். தோல்வி பயத்தால்தான் தேர்தலை அரசு இழுத்தடிக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

” மாகாணசபைத் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். எமது பக்கத்தில் தவறு இடம்பெற்றதுதான். அது சரிசெய்யப்பட வேண்டும்.

அதற்கான ஆதரவை நாம் வழங்குவோம். எனவே, எமது தவறை மட்டும் சுட்டிக்காட்டிக்கொண்டு தேர்தலை இழுத்தடிக்க வேண்டாம். இரு வருடங்கள் தவறை மட்டும்தான் கூறிக்கொண்டிருக்கின்றீர்கள்.

அதேபோல உள்ளாட்சிமன்றத் தேர்தலையும் இரு வருடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது.”- என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...