wimal
செய்திகள்அரசியல்இலங்கை

பெரமுனவிலிருந்து வெளியேறுகிறார் விமல் வீரவன்ச?

Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசியிலிருந்து வெளியேறுவது தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி அவதானம் செலுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக ‘மூன்றாவது வழி’ எனும் வேலைத்திட்டத்தை விமல் வீரவன்ச உருவாக்கியுள்ளார் எனவும், இதன்படி மாகாண தேர்தலில் அவரின் கட்சி தனித்தே போட்டியிடும் எனவும் தெரியவருகின்றது.

மொட்டு கட்சிக்கும், விமல் அணிக்குமிடையில் கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரச பங்காளிக்கட்சிகளின் பங்கேற்போடு உருவான 11 கட்சிகள் அணியிலும் விமலின் கட்சி முக்கிய இடத்தை வகிக்கின்றது.

விமல் தரப்பின் இந்த நகர்வானது மொட்டு கட்சியை சினம் கொள்ள வைத்துள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ‘மூன்றாவது வழி’யை உருவாக்கியுள்ளார் அமைச்சர் விமல்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...