Udaya Gammanpila
செய்திகள்அரசியல்இலங்கை

மௌனம் காக்கமாட்டோம்! – உதய கம்மன்பில எச்சரிக்கை

Share

மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்படுவதால்தான் அரசில் இருந்துகொண்டு எதிரணி பணியை செய்கின்றோம். தொடர்ந்தும் போராடுவோம். மௌனம் காக்கமாட்டோம் – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

யுகதனவி ஒப்பந்தம் மற்றும் திருகோணமலை உடன்படிக்கை ஆகியவற்றுக்கு எமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம் .இது விடயத்தில் எமது நிலைப்பாடு மாறாது. பின்வாங்கவும் மாட்டோம். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பில் பேசுவோம்.

20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படும்போது அமைச்சரவையில் மௌனம் காத்து, வாத விவாதங்களில் பங்கேற்காமல் செய்த தவறை மீண்டும் செய்யமாட்டோம். அதற்காகவே தற்போது எமது கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்து வருகின்றோம்.

அரசை சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.” – என்றார்.

#SriLanaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...