ranil wickremesinghe 759fff
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவுடன் நல்லுறவைப் பேண வேண்டும்! – ரணில்

Share

” இந்தியாவுடன் இலங்கை சிறந்த நல்லுறவைப் பேண வேண்டும். ” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை, இந்தியாவுக்கிடையில் பல நூற்றாண்டுகாலமாக நட்புறவு இருந்துவருகின்றது. அந்நாட்டில் இருந்தே பௌத்த மதம்கூட இலங்கை வந்தது. கலாச்சார ரீதியிலான உறவும் இருக்கின்றது.

எனவே, வெளிவிவகாரக் கொள்கையின்போது இந்தியாவுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதற்காக பிற நாடுகளுடன் உறவாடக்கூடாது என்றில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு சிக்கல் ஏதும் ஏற்படாத வகையிலேயே செயற்பட வேண்டும்.

ஆனால் இந்த அரசு நட்பு நாடுகளைக்கூட பகைத்துக்கொண்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் இலங்கை மௌனம் காப்பதே சிறந்தது. அவ்வாறு இல்லாவிட்டால் ரஷ்யா மற்றும் அமெரிக்காவையும் பகைத்துக்கொள்ள வேண்டிவரும்.” – என்றார் ரணில்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...