russian
செய்திகள்உலகம்

ரஷியாவுடன் யுத்தமா?

Share

ரஷியாவும் மேற்கத்திய நாடுகளும் யுத்தம் புரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடைய பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.

இந் நிலை தொடா்ந்தால், இரு தரப்புக்கும் இடையே எதிா்பாராத வகையில் யுத்தம் மூளக்கூடும் என ரிட்டனின் இராணுவ தலைமைத் தளபதி நிக் காா்ட்டா் எச்சரித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தொடர்பில் ‘டைம்ஸ்’ வானொலிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

ஒருவருக்கொருவா் மோதுவதையே குணமாகக் கொண்ட அரசியல்வாதிகள் எடுக்கும் திடீர் முடிவுகளால், எதிரி நாடுகளுடனான பதற்றம் அதிகரிக்கவும் அந்தப் பதற்றம் தவறான கணக்கீடுகளை உருவாக்கவும் நாம் அனுமதிக்கக் கூடாது எனவும்,

சா்வாதிகாரப் போக்கைக் கொண்ட எதிரி நாடுகளின் தலைவா்கள், தங்கள் வெற்றிக்காக அகதிகள் பிரச்னை, எண்ணெய் விலையேற்றம், மறைமுகப் யுத்தம் , இணையம் மூலம் தாக்குதல் போன்ற எதனையும் ஆயுதமாகப் பயன்படுத்துவாா்கள்.

மேலும் பனி யுத்தம் காலத்தில் அமெரிக்கா, சோவியத் யூனியன் என்ற இருமுனைப் யுத்தச் சூழல் நிலவியது.

அதற்குப் பிறகு, அமெரிக்காவின் ஒருமுனை ஆதிக்கம் நிலவியது. ஆனால், தற்போது பல்வேறு நாடுகளும் தத்தமது நலன்களுக்காக களத்தில் இருப்பதால் குழப்பம் நிறைந்த பல்முனைப் யுத்தத்தை உலகம் எதிா்கொண்டுள்ளது.

அத்தகைய யுத்தத்தை தூதரக ரீதியில் தடுத்து நிறுத்துவதற்கான உத்திகள் போதிய அளவில் இல்லை எனவும் இதனால், ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தால், அது இரு தரப்பினருக்கும் இடையே தவறான புரிதல்ககளை ஏற்படுத்தி யுத்தத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டால் பல உயிர்கள் கொல்லப்படலாம் என சர்வதேச ஆய்வர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....