20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

Share

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாக சிவில் சமூக ஆர்வலர் நாகானந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

சட்டமாா அதிபரின் ஆலோசனையின் பேரில் அமைச்சரவை செயலாளர் இந்த விடயத்தை உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியா ஒப்பந்தத் தகவல்களை வெளியிட விரும்பாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தகவல்களைப் பகிரங்கப்படுத்த முடியாது என்பதால், அந்தத் தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இது நாட்டின் இறையாண்மையை கடுமையாக மீறுவதாகவும், நாட்டின் நீதித்துறை கூட இந்தியாவுக்கு பணிந்து, அதன் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...