gna
செய்திகள்இலங்கை

இலங்கையில் வஹாபிசம் துடைத்தெறிப்பட வேண்டும்! – ஞானசாரர்

Share

நியூசிலாந்தில் இலங்கையரால் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ள பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், இலங்கையில் வாஹாபிஸம், சலாபிசம் என்பனவை முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

நியூசிலாந்து தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே ஞானசார தேரர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இஸ்லாமிய நலன்புரி அமைப்புகள் மற்றும் முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய வெளியீடுகள் மற்றும் ஒலி, ஒளி சாதனங்கள் என்பவையும் தடைசெய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஜ் ஹிஸ்புல்லாவையும் ஏனையவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துக்கின்றபோதும், விசாரணைகள் முடிவடைந்து உண்மை கண்டறியப்படும் வரை அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...