gna
செய்திகள்இலங்கை

இலங்கையில் வஹாபிசம் துடைத்தெறிப்பட வேண்டும்! – ஞானசாரர்

Share

நியூசிலாந்தில் இலங்கையரால் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ள பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், இலங்கையில் வாஹாபிஸம், சலாபிசம் என்பனவை முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

நியூசிலாந்து தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே ஞானசார தேரர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இஸ்லாமிய நலன்புரி அமைப்புகள் மற்றும் முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய வெளியீடுகள் மற்றும் ஒலி, ஒளி சாதனங்கள் என்பவையும் தடைசெய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஜ் ஹிஸ்புல்லாவையும் ஏனையவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துக்கின்றபோதும், விசாரணைகள் முடிவடைந்து உண்மை கண்டறியப்படும் வரை அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...