202201140446195370 Tamil News china Builds Illegal Villages Inside Bhutan SECVPF 1
செய்திகள்உலகம்

அத்துமீறும் சீனா! – அண்டை நாடுகளில் சட்டவிரோத கிராமங்கள்

Share

அண்டை நாடுகள் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சீனா பூட்டானுக்குள் இரண்டு கிராமங்களை சட்டவிரோதமாக நிறுவி வருகின்றமை தொடர்பில் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, டோக்லாம் பள்ளித்தாக்கு பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சீனா வீதி நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை மூலம் சீனா ஒரு முழு அளவிலான கிராமத்தை உருவாக்கி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த அத்துமீறல் கட்டுமான பணிகளை கடந்த நவம்பர் மாதமளவிலேயே கண்டறிந்தோம் என இன்டல் ஆய்வகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரான டேமியன் சைமன் தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவுக்கும் பூட்டானுக்கும் இடையே காணப்படும் குறித்த சர்ச்சைக்குரிய பகுதியில் நடைபெற்றுவரும் இந்த நிர்மாணப் பணி நடவடிக்கைகள் மறுக்க முடியாத சான்றாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...