Vimal
செய்திகள்அரசியல்இலங்கை

ஆணவப்போக்கில் செயற்படுபவர்களால் சவால்களை எதிர்கொள்ள முடியாது! – பஸிலை சாடுகிறார் விமல்

Share

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சமீது, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ச சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்துள்ளார். இதனால் கொழும்பு அரசியலில் மீண்டும் கொதிநிலை ஏற்பட்டுள்ளது.

அரச பங்காளிக்கட்சிகளின் முக்கிய கூட்டமொன்று இன்று (02) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது நாட்டை மீட்டெடுப்பதற்கான யோசனைகளும் முன்வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, நிதி அமைச்சர் பஸிலை, அமைச்சர் விமல் விளாசித்தள்ளியுள்ளார்.

” எனக்கு மூளை உள்ளது, எனவே, நிபுணர்களின் ஆலோசனை தேவையில்லை எனக்கூறி, ஆணவப்போக்கில் செயற்படுபவர்களால் சவால்களை எதிர்கொள்ள முடியாது. நெருக்கடி நிலைமைகளை சுட்டிக்காட்டி, ஒன்பது கடிதங்களை அனுப்பினார் எனவும், ஆனால் எதற்கும் பதில் வரவில்லை எனவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகின்றார். நிதி அமைச்சரை சந்திக்க நேரம் வழங்கப்படவில்லை.

நாடு கடும் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் மத்திய வங்கி ஆளுநருக்கு நிதி அமைச்சரை சந்திக்க முடியவில்லையெனில், பிறகு நிலைமையை விளக்கவா வேண்டும்? இனிமேலும் எம்மால் மௌனம் காக்க முடியாது. அதனால்தான் உண்மையை வெளிப்படுத்துகின்றோம்.” – என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...