maithripala sirisena
செய்திகள்அரசியல்இலங்கை

ஆட்சி மாற்றம் பற்றி மட்டும் சிந்திக்காமல், நாட்டை மீட்பதற்கும் சிந்தியுங்கள்! – மைத்திரி

Share

நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்நிலையில் இருந்து மீள்வதற்கு சர்வக்கட்சி மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அரச பங்காளிக்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்படி யோசனையை முன்வைத்தார்.

” நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முக்கியமாக அதேபோல முன்னுரிமை அடிப்படையில் செய்ய வேண்டிய விடயங்களுக்கே அரசு ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும். வீதி புனரமைப்பு போன்ற பணிகளை உடன் நிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மருந்து பொருட்களை வாங்குவதற்கான டொலர்களை திரட்டிக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாம் கூட்டணி ஒன்றை அமைத்தோம். தேர்தலுக்கு பிறகு அந்த கூட்டணி கூடவே இல்லை. எமக்கு அரசுக்குள் கதைப்பதற்கு இடமும் இல்லை. எனவேதான் இப்படியான கூட்டங்களை நடத்தி யோசனைகளை முன்வைக்கின்றோம்.

எதிரணிகளும் ஆட்சிமாற்றம் பற்றி மட்டும் சிந்திக்காமல், நாட்டை மீட்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...