image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

Share

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து பலர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

“அவர்கள் எனது பிறப்பு ஆண்டு மற்றும் தற்போதைய ஆண்டையும் கூட அதில் சேர்த்திருந்தனர்.
முதலில் நான் சிரித்தேன்,” நான் அதை ஆராய்ந்தபோது, அந்தப் பதிவுக்கு மேலே ‘தேசிய மக்கள் சக்தி’ என்ற பெயரைக் கண்டேன்.

இது மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தியையோ எதிர்ப்பவர்கள் யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டது என்று நம்பும்படி உள்ளதென அவர் விளக்கினார்.

தேர்தலில் போட்டியிடும் திறன் தனக்கு இப்போது இல்லை என்றாலும், அரசியலில் இருந்து விலகும் நோக்கம் இல்லை என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார். அரசியல்வாதிகள் மரணம் வரை ஓய்வு பெறுவதில்லை.

வலதுசாரி குழுக்களின் தாக்குதல்களை முறியடித்து, இடதுசாரி அரசியல் இலட்சியங்களை முன்னேற்றி, எனது கட்சியை பலப்படுத்தி, இந்த நாட்டில் ஒரு ஐக்கியப்பட்ட இடதுசாரி இயக்கத்தை கட்டியெழுப்ப உதவுவதே எனது இலக்கு,” என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...