corona vaccination 87687
செய்திகள்உலகம்

தடுப்பூசி ஏற்றுமதி – மீண்டும் ஆரம்பிக்கிறது இந்தியா

Share

கொரோனா தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒருவரான இந்தியா கடந்த ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசி ஏற்றுமதியை இடைநிறுத்தியிருந்தது. உள்நாட்டில் தடுப்பூசிகளுக்கு ஏற்பட்ட ஆகக்கூடுதலான கிராக்கியை கருத்தில்கொண்டு ஏற்றுமதியை தற்காலிகமாக இடைநிறுத்த இந்திய அரசாங்கம் தீர்மானித்தது.

Quad நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதமளவில் இந்தியா 300 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தியா 76 நாடுகளுக்கு இந்த தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது. இதில் பெரும்பாலானவை Oxford-AstraZeneca மற்றும் Covishield தடுப்பூசிகள் ஆகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 5
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு வான்பரப்பு மூடல்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 12 விமான சேவைகளை ரத்து செய்தது!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ஸ்ரீலங்கன்...

06 4
செய்திகள்உலகம்

ஈரான் எல்லையில் அதிரடி: ஊடுருவல் முயற்சியைத் தடுத்ததாக IRGC அறிவிப்பு!

ஈரானின் மேற்கு எல்லைப் பகுதியினூடாக ஊடுருவித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த பிரிவினைவாதக் குழுக்கள் மீது, ஈரான்...

05 4
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு பதற்றம்: அவுஸ்திரேலியா தனது இராணுவ விமானங்களை அனுப்பி வைத்தது!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா தனது...

04 4
செய்திகள்இலங்கை

உணவுப் பொதிகளில் கடத்தப்பட்ட 53.6 கோடி போதைப்பொருள்: மலேசியாவிலிருந்து வந்த பார்சல்கள் சிக்கின!

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட சுமார் 536 மில்லியன் ரூபா (53.6...