தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் பொதுவெளியில் நடமாடுவதற்கு தடைவிதிக்கும் நடைமுறை இன்னும் இரு வாரங்களில் அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
கொரோனா தடுப்பூசியின் இரண்டு அலகுகளையும் பெறாதவர்கள் மக்கள்கூடும் பொது இடங்களில் நடமாடுவதற்கு தடை விதிக்கும் யோசனையை 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்த திட்டமிட்டிருந்தோம்.
எனினும், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்கள், அட்டையை கொண்டுசெல்வதில் சிக்கல் உள்ளது. எனவே, மாற்று வழிகள் தொடர்பில் தொழில்நுட்பரீதியில் ஆராய்ந்துவருகின்றது. இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த பணி முடிவடைந்துவிடும்.” – என்றார்.
#SrilankaNews