ஐ.நா. கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் !
இன்று (21) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபச்ச நாளைய தினம் ( 22) விசேட உரையை நிகழ்த்தவுள்ளார் .
இதனைத் தொடர்ந்து 23, 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள உணவு மற்றும் வலு சக்தி தொடர்பான உயர்மட்ட அமர்வுகளிலும் ஜனாதிபதி கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார் .
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபச்ச தலைமையிலான தூதுக்குழுவினர் கடந்த 18ஆம் திகதி நியூயோர்க் நகரை சென்றடைந்தனர்.
இந்த அமர்வின் இரண்டாம் நாள் பிற்பகல் வேளையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபச்ச உரை நிகழ்த்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இம் மாநாட்டு அமர்வின் இடைப்பட்ட காலங்களில் ஜனாதிபதி பல நாட்டு அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment