0b7b205f pearlonenews தாக்குதல் attack
இலங்கைசெய்திகள்

பாஷையூரில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! – 7 பேர் கைது

Share

வீடு ஒன்றுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம்  நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பாஷையூர் அந்தோனியார் கோயில் அருகில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்றுள் புகுந்த குறித்த வன்முறைக்கும்பல் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் வீட்டாரையும் அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 7 பேரை கைதுசெய்துள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் , வாள், கம்பி மற்றும் கட்டை போன்றவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருள்களும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...