un 1
செய்திகள்அரசியல்இலங்கைஉலகம்

ஐ.நா. 49 ஆவது அமர்வு திங்கள் ஆரம்பம்!

Share

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை 28ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி ஏப்ரல் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த அமர்வில், மார்ச் 3 ஆம் திகதி உரையாடல் நடைபெறவுள்ளது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழு நேற்றையதினம் ஜெனிவா பயணமாகியுள்ளது.

இந்த அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமர்வில், சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை ஏற்கனவே இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கைக்கு பதிலளித்து இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...