un 1
செய்திகள்அரசியல்இலங்கைஉலகம்

ஐ.நா. 49 ஆவது அமர்வு திங்கள் ஆரம்பம்!

Share

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை 28ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி ஏப்ரல் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த அமர்வில், மார்ச் 3 ஆம் திகதி உரையாடல் நடைபெறவுள்ளது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழு நேற்றையதினம் ஜெனிவா பயணமாகியுள்ளது.

இந்த அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமர்வில், சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை ஏற்கனவே இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கைக்கு பதிலளித்து இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...