21552472 tn96
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஷட்-டவுன்: நிதி நெருக்கடியால் அரசாங்கப் பணிகள் ஒரு பகுதி முடக்கம்!

Share

மத்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒறவிட்டதை அடுத்து, அந்நாடு இன்று சனிக்கிழமை (31) முதல் ஒரு பகுதி பணிநிறுத்தத்திற்கு (Partial Shutdown) உள்ளாகியுள்ளது.

2026-ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதற்கான காலக்கெடு நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்தது.

இந்த நிதி நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில், செனட் சபை நேற்று இரவு ஒரு சமரசத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதில் பெரும்பாலான துறைகளுக்கு செப்டம்பர் வரை நிதி வழங்கவும், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு (DHS) மட்டும் இரண்டு வார காலத் தற்காலிக நிதி வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

செனட் ஒப்புதல் அளித்த போதிலும், இதற்கான சட்டமூலம் பிரதிநிதிகள் சபையினால் (House of Representatives) இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. பிரதிநிதிகள் சபை தற்போது விடுமுறையில் இருப்பதால், அவர்கள் மீண்டும் கூடும் திங்கட்கிழமை (பெப்ரவரி 02) வரை இந்தப் பணிநிறுத்தம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ‘ஷட்-டவுன்’ காரணமாக கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட சுமார் 75% மத்திய அரசுத் துறைகளின் அத்தியாவசியமற்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் ஊதியமில்லாத விடுப்பில் செல்ல வேண்டிய நிலை அல்லது ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தச் சமரசத் திட்டத்திற்கு ஏற்கனவே தனது ஆதரவை வெளியிட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை பிரதிநிதிகள் சபை கூடியவுடன் இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் ஏற்படும் இரண்டாவது பணிநிறுத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...