22792944 tn7
இந்தியாசெய்திகள்

திருமணக் கொண்டாட்டத்தில் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது: 2 சிறுவர்கள் பலி!

Share

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள உமை ஆசாத்நகர் கிராமத்தில், சனிக்கிழமை இரவு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இசை நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது துப்பாக்கி வெடித்தது. துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடும் போது இந்தச் சம்பவம் நடந்ததாகப் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

12 வயதான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த 17 வயதுச் சிறுவன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்ததாக வைத்தியர்கள் அறிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை யார் நடத்தினர் என்பது குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....