22792944 tn7
இந்தியாசெய்திகள்

திருமணக் கொண்டாட்டத்தில் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது: 2 சிறுவர்கள் பலி!

Share

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள உமை ஆசாத்நகர் கிராமத்தில், சனிக்கிழமை இரவு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இசை நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது துப்பாக்கி வெடித்தது. துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடும் போது இந்தச் சம்பவம் நடந்ததாகப் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

12 வயதான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த 17 வயதுச் சிறுவன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்ததாக வைத்தியர்கள் அறிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை யார் நடத்தினர் என்பது குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....