Lady
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாசகம் பெறும் பெண்ணுக்கு சொந்தமாக இரு வீடுகள்!!

Share

மொரட்டுவ பிரதேசத்தில் யாசகம் பெறும் பெண்ணுக்கு சொந்தமாக இரு வீடுகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி சுமார் 200,000 ரூபாவை மோசடி செய்த பிச்சைக்காரப் பெண் ஒருவரை மொரட்டுவ பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.

உயன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் தனது ஏ.டி.எம். அட்டை தவறிவிட்டதாகவும், அதில் இருந்து சுமார் 130,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாகவும் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய களுத்துறை வடக்கு , விலேகொட பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

மொரட்டுவ பிரதேசத்தில் யாசகம் பெற்றுக்கொண்டிருந்த இவர் ஏ டி எம் அட்டை தரையில் விழுந்து கிடந்த நிலையில் தான் எடுத்ததாக விசாரணைகளில் தெரிவித்திருந்தார்.

மேலும் உணவு, பானங்கள் வாங்குவதற்காக அவரது கணவர் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை பொலிஸாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

குறித்த சந்தேகநபர் யாசகம் பெற்றாலும் 20,000 ரூபா வாடகைக்கு கொடுக்கப்பட்ட இரண்டு வீடுகளின் உரிமையாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...