AFDB Donates 83.6m for Ethiopia Djibouti Electricity Trade
செய்திகள்இலங்கை

தினமும் இரு மணி நேர மின்வெட்டே தீர்வு!!

Share

நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலமும் இரு மணித்தியாலங்களும் மின்வெட்டு அவசியமானது என இலங்கை மின்சார சபை தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இல்லையெனில் ஒரு நாளைக்கு 4 முதல் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டை தவிர்க்க முடியாமல் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 60 வீதமாக குறைந்துள்ளதாகவும் அது 40 வீதத்திற்கு குறைந்தவுடன் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

எரி பொருளை வாங்குவதற்கு கிடைக்காததாலும் தனியார் டீசல் மின்சார உற்பத்தி நிலையங்களில் அவசர கொள்முதலில் அதிக விலைக்கு மின்சாரம் பெற முடியாததால் தினமும் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் படுவதே சிறந்த தீர்வாக அமையும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இப்படியே தொடர்ந்தால் அடுத்த மூன்று நான்கு வாரங்களுக்கு தினமும் 7 முதல் 8 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...

Death penalty 22
இலங்கை

எட்டுப் பேருக்கு மரண தண்டனை – கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற...

dollar
வணிகம்இலங்கை

அதிகரித்தது அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பிரகாரம், அமெரிக்க டொலரின்...