rahuman
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டில் இரு வேறு சட்டத்திட்டங்கள்! – முஜிபூர் ரஹ்மான்

Share

” நாட்டில் அமுலில் உள்ள சுகாதார சட்டத்திட்டங்கள்கூட இருவேறு விதமாகவே அமுல்படுத்தப்படுகின்றன.”- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்று சபையில் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல் அறிக்கையில், விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம். ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று கூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பயன்படுத்தியே ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தை தடுக்க முயற்சி எடுக்கப்பட்டது.

பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாதெனில், மஹிந்த ராஜபக்ச கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டிக்கு எவ்வாறு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்? இதன் பின்னணி என்ன?

காலியில் நடைபெறும் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டிக்கும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, மஹிந்த ராஜபக்ச கிண்ணத்தொடருக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...