rahuman
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டில் இரு வேறு சட்டத்திட்டங்கள்! – முஜிபூர் ரஹ்மான்

Share

” நாட்டில் அமுலில் உள்ள சுகாதார சட்டத்திட்டங்கள்கூட இருவேறு விதமாகவே அமுல்படுத்தப்படுகின்றன.”- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்று சபையில் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல் அறிக்கையில், விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம். ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று கூடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பயன்படுத்தியே ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தை தடுக்க முயற்சி எடுக்கப்பட்டது.

பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாதெனில், மஹிந்த ராஜபக்ச கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டிக்கு எவ்வாறு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்? இதன் பின்னணி என்ன?

காலியில் நடைபெறும் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டிக்கும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, மஹிந்த ராஜபக்ச கிண்ணத்தொடருக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...