stalin
செய்திகள்இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் – தொழிற்சங்க கூட்டணி அதிரடி!

Share

தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் – தொழிற்சங்க கூட்டணி அதிரடி!

தமது ஒன்லைன் வேலை நிறுத்தம் உட்பட அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளும் தொடரும். இவ்வாறு
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவையில் தீர்வு முன்வைக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் தொழிற்சங்க கூட்டணி பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரவையில் அதிபர் ஆசிரியர்கள் சம்பள பிரச்சினை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆசிரியர் சங்கங்கள் 2018 ஆம் ஆண்டுக்கான சம்பள முன்மொழிவையும் ஒரே நேரத்தில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளன. இருப்பினும் இக் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

சேவைத் தரம், கௌரவம் மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றுக்கு இணையான சம்பளத்துக்கான போராட்டத்தையே நாம் மேற்கொண்டுள்ளோம். இந்த நிலையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஏற்றுக்கொள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தயாராக இல்லை.

இந்த நிலையில், அமைச்சரவை மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரால் முன்வைக்கப்பட்ட திட்டங்களை நாம் நிராகரிக்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
death body 1
இலங்கை

மெகசின் சிறைச்சாலையில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித்தகவல்கள்.

நேற்றைய தினம் இரவு, கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த கைதி...

Chemmani Mass Graves
இலங்கை

தினந்தோறும் கிடைக்கப்பெறும் என்புக்கூடுகள் – அதிகரிக்கும் பதற்றம்.

100 நாட்களாக, செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507...

dengue
இலங்கை

தென் மாகாணத்தில் அதிகம் பதிவாகும் டெங்கு நோயாளிகள்.

இந்த ஆண்டில் இதுவரை 88,522 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது....

parlimen president 1
இலங்கை

சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள் தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை...