Volodymyr Zhelensky
செய்திகள்உலகம்

அமெரிக்காவை அதிகம் நம்பியதாலேயே இந்த நிலை!

Share

அமெரிக்காவை அளவுக்கதிகம் நம்பியதாலே உக்ரைனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் ரஷ்ய- உக்ரைன் யுத்தத்தினால் எதிர்வரும் நாட்களில் சுற்றுலாத்துறை, தேயிலை ஏற்றுமதி என்பவற்றுக்கு பாரிய தாக்கம் ஏற்படலாமென்றும் உக்ரைன் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,அமெரிக்கா உதவும் என்ற நம்பிக்கையில் உக்ரைன் இருந்தது. ஆனால் அமெரிக்கா உதவ முன்வரவில்லை. நேட்டோவில் அங்கத்துவம் பெற உக்ரைன் மேற்கொண்ட முயற்சி ரஷ்யாவின் இருப்புக்கு அச்சுறுத்தலானது. ரஷ்யாவுடன் உடன்பாட்டுடன் செல்லாது மேலைத்தேய நாடுகளுடன் நெருக்கமாக செயற்பட முயன்றதால் இந்த நிலைமை ஏற்பட்டது.

இந்த இரு நாடுகளும் எமது நட்பு நாடுகள். ரஷ்யாவிலிருந்து எமக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அத்தோடு எமது பிரதான தேயிலை ஏற்றுமதி நாடாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...