Sritharan 1
செய்திகள்அரசியல்இலங்கை

பொது அறிவு இல்லாவிட்டாலும் பொதுவான அறிவாவது இருக்க வேண்டும்! – சிறீதரன் எம்.பி பதிலடி

Share

“பொது அறிவு தான் இல்லாவிட்டாலும், பொதுவான அறிவாவது இருக்க வேண்டும் ” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் பேச்சு தொடர்பில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

மேலும், கௌரவ சாணக்கியனின் பெயரை பிழையான முறையில் சித்தரித்து பேச முற்படும் குறித்த தகுதியற்ற கீழ்த்தரமான பாராளுமன்ற உறுப்பினரால் பாராளுமன்றத்தின் கௌரவமும் மரியாதையும் கேள்விக்குட்படுத்தப்படுகிறது.

சபையில் இல்லாத ஒரு கௌரவ உறுப்பினரின் பெயரை சுட்டிக்காட்டி போலிக்குற்றச்சாட்டை முன்வைப்பதும் ஒரு அறிவுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் செயல் இல்லை என்பதையும், இவர்களின் தரத்தையும் தகுதியையும் மக்கள் நன்கு அறிவார்கள். எனவும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் சாணக்கியனை ‘முகமது சாணக்கியன்’ என தெரிவித்ததுடன் அவர் தொடர்பில் சர்ச்சையான கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பதில் வழங்க முற்படும் போடும் சுமந்திரன் மற்றும் சிறீதரன் தொடர்பில் மிக அநாகரிகமான முறையில் திலீபன் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...