images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

Share

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கையர்களுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான இயல்பு நிலைக்காகப் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மிக நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இந்தியா உடனடியாக “சாகர் பந்து (Sagar Bandhu)” நடவடிக்கையின் கீழ் அவசர நிவாரணப் பொருட்களையும், அத்தியாவசிய மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண ஆதரவையும் அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமைக்கு ஏற்ப மேலும் உதவிகளையும், ஆதரவையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கே முதலிடம்” (Neighbourhood First) என்ற கொள்கை மற்றும் “விஷன் மகாசாகர்” (Vision Sagar) வழிகாட்டுதலின்படி, இலங்கையின் தேவைப்படும் நேரத்தில் இந்தியா உறுதியுடன் துணை நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...