tamilnadu
இந்தியாசெய்திகள்

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த தொழிற்சங்கங்கள்! – மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு

Share

இந்திய மத்திய அரசின் முறையற்ற பொருளாதார கொள்கைகள் மற்றும் தொழிலாளர் திட்டங்கள் ஆகியவற்றை கண்டித்து நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று முதல் இந்த இந்த வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளன.

குறித்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அனைத்துத்துறைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

“வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது” என மத்திய-மாநில அரசுகள் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையிலும் குறித்த போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் இறங்கியுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.சார்பான தொழிற்சங்கங்க உறுப்பினர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

தமிழகத்தில், அரச பஸ் சேவைகள் இடம்பெறாத நிலையில், தனியார் பஸ் சேவைகள் மற்றும் இடம்பெற்றன. இதனால் பஸ்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அரச வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு, கிராம வங்கிகள் உள்ளிட்ட வங்கி சேவைகள்
அரசு அலுவலக பணிகல், தபால், வருமானவரித்துறை, சுங்கம், கலால் மற்றும் மின்சாரத்துறை பணிகள் ஆகியனவும் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

#IndiaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...