இந்தியாசெய்திகள்

மனைவியைக் கொன்று தானும் உயிரை விட்ட கணவரின் சோகக் கதை

suicide 1
Share

உடல்நலம் குன்றிய மனைவியை சரிவரக் கவனிக்க முடியவில்லை என்பதால் மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவமானது கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் குட்டநாடு பகுதியைச் சேர்ந்த ஜோசப் (80), என்பவர் விவசாயி. இவரது மனைவி லீலாம்மா (75), இந்த தம்பதிகளுக்கு 5 மகள்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் திருமணமாகி வேறு இடங்களில் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளாக மனைவி உடல் நலம் குன்றிய நிலையில் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் கணவன் தான் கவனித்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக வயதான காரணத்தால் மனைவியை சரிவர கவனிக்க ஜோசப்பால் முடியவில்லை.

நேற்று வீட்டுச் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஜோசப் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த பொலிஸார் ஜோசப் உடலை கைப்பற்றிய நிலையில் ஜோசப் மனைவி லீலாம்மா ஒரு அறையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

மனைவியைக் கொலை செய்துவிட்டு நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், என ஜோசப் எழுதிய கடிதம் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.

இதனை ஆதாரமாக வைத்து இரு உடல்களையும் கைப்பற்றிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...