22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

Share

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில், நேற்றைய தினம் (09.05.2025) இரவு திருமஞ்ச திருவிழா இடம்பெற்றது.

திருவிழாவிற்காக தென்னிலங்கையில் இருந்து இரு யானைகள் அழைத்து வரப்பட்டு இருந்தன. மஞ்ச திருவிழாவின் போது, மஞ்சத்திற்கு முன்பாக இரு யானைகளும் அழைத்து வரப்பட்டன.

அவ்வேளை வெடிகள் கொளுத்தப்பட்டு, தீப்பந்த விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

அதன்போது யானைகளில் ஒன்று மிரண்டதில் , அருகில் நின்ற இருவர் காயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆலய திருவிழாக்களுக்கு யானைகளை அழைத்து வருவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில், உரிய அனுமதிகள் இன்றி யானைகள் அழைத்து வரப்படுகின்றன.

அவ்வாறான நிலைகளில் யானைகள் மிரண்டாலோ, யானைகளுக்கு மதம் ஏற்பட்டாலோ அதனை கட்டுப்படுத்த முடியாத நிலைமைகள் ஏற்பட்டால் உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாயங்கள் உள்ளதனால், யானைகளை அழைத்து வருவதற்கு உரிய அனுமதிகள் ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்க வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...