Sritharan 1
செய்திகள்அரசியல்இலங்கை

மாவீரர்களின் தியாகங்கள் என்றுமே சுடர்விட்டு ஒளிர்ந்தவாறே இருக்கும்! – நாடாளுமன்றில் ஸ்ரீதரன் எம்.பி

Share

தமிழ் மக்கள் அனைவர் மத்தியிலும், ஆழ்மன உணர்வுகளோடு இரண்டறக் கலந்து காணப்படும் ஈகைத் திருநாளே தமிழ்த் தேசிய மாவீரர் நாள். இவ்வாறு நாடாளுமன்றத்தில் மாவீரா்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசம் எங்கும் பரந்து வாழும் உலகத் தமிழர்கள் அனைவரதும் ஆழ்மன உணர்வுகளோடு இரண்டறக் கலந்துபோன திருநாளே தமிழ்த் தேசிய மாவீரர் நாள்.

உலகமே பிரமித்துபோகும் பிரமாண்டத்தோடு, தமிழின விடுதலை ஒன்றையே மூச்சாகவும், வீச்சாகவும் கொண்டு, 30 ஆண்டுகாலமாக நடைபெற்று முடிந்த மக்களுக்கான போராட்டத்திற்காக தம்மையே தாரைவார்த்த எம் தேச வீரர்களை பயங்கரவாதிகள் என்று பறைசாற்றுவது எத்தனை அபத்தமானது?

போரின் விளைவால் அரச படைகளால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்த எம் மக்களுக்கு
ஆறுதலாக அமைவது இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை ஒன்றே.

இந்த அடிப்படை உரிமையைக்கூட, பறிக்க முனையும் இலங்கை அரசின் செயற்பாடுகள், எமது மக்களின் இருப்பை மேலும் மேலும் கேள்விக்குட்படுத்துவனவாகவே காணப்படுகின்றன.

நினைவேந்தல்களைத் தடுப்பது, நினைவேந்தலில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்துவது, கைது செய்வது போன்ற அரசின் நடவடிக்கைகள் எமது மாவீரர்களின் உயிர்த் தியாகங்களையும், அவர்களின் புனிதத்தன்மையையும் மலினப்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது.

தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து, தர்மத்தின் வழி நின்று, இன விடுதலை என்ற சத்திய லட்சியத்திற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து, தமிழினத்தின் எழுச்சிக்கு மூச்சாகி நின்ற எம் மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலிகள் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...