8f481d7b47
செய்திகள்இலங்கை

நாட்டு மக்களிடம் அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை!

Share

நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆகவே சில வாரங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு நாட்டு மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியஇராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன  இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

மொத்த மக்கள் தொகையில் 50 வீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இது ஒரு மகத்தான சாதனையாகும்.

சமுதாயத்தில் வைரஸ் பரவுவது குறைந்து வருகின்ற தற்போதைய நிலைமையை பேணுவதே நாம் இயல்பு நிலைக்கு திரும்ப உதவும் செயற்பாடாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

அந்தவகையில் இந்த நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும், வரவிருக்கும் சில வாரங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அவர் நாட்டு மக்களை கோரியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...