8f481d7b47
செய்திகள்இலங்கை

நாட்டு மக்களிடம் அரசாங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை!

Share

நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆகவே சில வாரங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு நாட்டு மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியஇராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன  இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

மொத்த மக்கள் தொகையில் 50 வீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இது ஒரு மகத்தான சாதனையாகும்.

சமுதாயத்தில் வைரஸ் பரவுவது குறைந்து வருகின்ற தற்போதைய நிலைமையை பேணுவதே நாம் இயல்பு நிலைக்கு திரும்ப உதவும் செயற்பாடாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

அந்தவகையில் இந்த நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும், வரவிருக்கும் சில வாரங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அவர் நாட்டு மக்களை கோரியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...