Bandula Gunawardena
செய்திகள்இலங்கை

அரிசி விலையை அதிகரிக்க முடியாது – பந்துல குணவர்தன

Share

அரிசி விலையை அதிகரிக்க முடியாது – பந்துல குணவர்தன

கொரோனாவால் பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரிசியின் விலை ஏற்றத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரிசியின் விற்பனை விலையை அதிகரிக்குமாறு அரிசி ஆலையின் உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்களின் முக்கிய உணவுப்பொருளான அரிசியின் விலையை அதிகரிக்க அரசாங்கத்தால் இடமளிக்க முடியாது.

ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாக்கும் குறைந்த விலையில் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

நிர்ணய விலைக்கு எதிராக அதிக விலையில் அரிசியை விற்பனை செய்வதெற்கென 6 களஞ்சியசாலைகளில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 லட்சம் மெற்றிக் தொன் நெல் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

அத்துடன், கொரோனாத் தொற்று பரவலால், உலகளாவிய ரீதியில் விநியோக வலையமைப்பு முடங்கிப்போயுள்ளதால் பொருள்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் போக்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...