களனி பாலம் தொடர்பான சர்ச்சை தொடர்பில் பந்துல குணவர்தன விளக்கம்
இலங்கைசெய்திகள்

களனி பாலம் தொடர்பான சர்ச்சை தொடர்பில் பந்துல குணவர்தன விளக்கம்

Share

களனி பாலம் தொடர்பான சர்ச்சை தொடர்பில் பந்துல குணவர்தன விளக்கம்

புதிய களனி பாலத்தில் ஆணிகள் கழற்றப்படவில்லை, அவற்றை இலகுவாக கழற்றி விடவும் முடியாது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருடப்பட்ட பொருட்களின் மொத்த இழப்பு அறுபது இலட்சம் மாத்திரமே அன்றி கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (19.07.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

களனி பாலம் தொடர்பான சர்ச்சை முற்றிலும் பொய்யானது: பந்துல குணவர்தன விளக்கம் | Bandula Kunawardana About New New Kelani Bridge

குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கில் நஷ்டம் இல்லை
மேலும் தெரிவிக்கையில், களனி பாலத்தின் ஆணிகள் கழற்றப்பட்தாக கூறப்படும் கதை முற்றிலும் பொய்யானது.

பாலத்தின் மேல்தளத்தில் பிவிசி குழாய்கள், தகவல் அமைப்பின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் குளிரூட்டிகளின் வெளிப்புற பாகங்கள், பாலத்தில் கண்கவர் ஒளி வடிவங்களை உருவாக்கும் விளக்குகள் ஆகியனவே திருடப்பட்டுள்ளன.

பீவிசி குழாய்கள் திருடப்பட்டதால் 40 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குளிரூட்டி உதிரிபாகங்கள் திருடப்பட்டதால் 0.5 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. கண்கவர் ஒளி வடிவங்களை உருவாக்கும் விளக்குகள் திருடப்பட்டதால் 10 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த இழப்பு அறுபது இலட்சம்.

புதிய களனி பாலத்தில் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படவில்லை. ஆணிகள் அகற்றப்படவில்லை. அவற்றை இலகுவாக கழற்ற முடியாது.

ஆணிகளை அகற்ற பொறியியல் நிறுவனம் சிறப்பு உபகரணங்களை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் பாலம் ஆபத்தில் இருக்கும். இது வெறும் ஆணி அடிக்கும் ஒரு அறிக்கை என குறிப்பிட்டுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...