gamini
செய்திகள்அரசியல்இலங்கை

மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது! – மின்சக்தி அமைச்சர்

Share

நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாதென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று மதியம் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

எரிபொருள் பிரச்சினையால் நாட்டில் இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கங்கள் அறிவித்திருந்தன.

இன்று ஒரு மணிநேரமும், நாளை முதல் இரு மணிநேரமும் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு தேவையான டொலர்களை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால், மத்திய வங்கி ஆளுநருக்கு பணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மின்சக்தி அமைச்சுக்கு, எரிபொருளை வழங்குவதற்கு வலுசக்தி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...