rohitha
செய்திகள்அரசியல்இலங்கை

பங்காளிகளின் கருத்துகள் எமக்கு முக்கியம் இல்லை! – ரோஹித அதிரடி

Share

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமைச்சரவையில் திருட்டுத்தனமாக பிரேரணை நிறைவேற்றப்படவில்லை – என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நானும் அமைச்சரவையில் இருக்கின்றேன். விமல் வீரவன்ச குறிப்பிடுவதுபோல அமைச்சரவையில் திருட்டுத்தனமாக எதையும் செய்யவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது.

அரசுக்குள் பிரச்சினைகள் இருந்தால் அவை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இடங்கள் உள்ளன. அமைச்சரவைக் கூட்டம், ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் போன்ற இடங்கள் இருக்கையில் வெளியில் சென்று பேசுவது, ஏற்புடைய நடவடிக்கை அல்ல.

நாம் தான் அரசுக்குள் தலைமைக்கட்சி. பங்காளிக்கட்சிகளின் கருத்துகள் எமக்கு முக்கியம் இல்லை. கூட்டணி என்றால் சிறு குழப்பம் இருக்கும். எப்படி இருந்தாலும் நாம் முன்னோக்கி பயணிப்போம்.” -என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...