rohitha
செய்திகள்அரசியல்இலங்கை

பங்காளிகளின் கருத்துகள் எமக்கு முக்கியம் இல்லை! – ரோஹித அதிரடி

Share

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமைச்சரவையில் திருட்டுத்தனமாக பிரேரணை நிறைவேற்றப்படவில்லை – என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நானும் அமைச்சரவையில் இருக்கின்றேன். விமல் வீரவன்ச குறிப்பிடுவதுபோல அமைச்சரவையில் திருட்டுத்தனமாக எதையும் செய்யவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது.

அரசுக்குள் பிரச்சினைகள் இருந்தால் அவை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இடங்கள் உள்ளன. அமைச்சரவைக் கூட்டம், ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் போன்ற இடங்கள் இருக்கையில் வெளியில் சென்று பேசுவது, ஏற்புடைய நடவடிக்கை அல்ல.

நாம் தான் அரசுக்குள் தலைமைக்கட்சி. பங்காளிக்கட்சிகளின் கருத்துகள் எமக்கு முக்கியம் இல்லை. கூட்டணி என்றால் சிறு குழப்பம் இருக்கும். எப்படி இருந்தாலும் நாம் முன்னோக்கி பயணிப்போம்.” -என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...