rohitha
செய்திகள்அரசியல்இலங்கை

பங்காளிகளின் கருத்துகள் எமக்கு முக்கியம் இல்லை! – ரோஹித அதிரடி

Share

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமைச்சரவையில் திருட்டுத்தனமாக பிரேரணை நிறைவேற்றப்படவில்லை – என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நானும் அமைச்சரவையில் இருக்கின்றேன். விமல் வீரவன்ச குறிப்பிடுவதுபோல அமைச்சரவையில் திருட்டுத்தனமாக எதையும் செய்யவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது.

அரசுக்குள் பிரச்சினைகள் இருந்தால் அவை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இடங்கள் உள்ளன. அமைச்சரவைக் கூட்டம், ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் போன்ற இடங்கள் இருக்கையில் வெளியில் சென்று பேசுவது, ஏற்புடைய நடவடிக்கை அல்ல.

நாம் தான் அரசுக்குள் தலைமைக்கட்சி. பங்காளிக்கட்சிகளின் கருத்துகள் எமக்கு முக்கியம் இல்லை. கூட்டணி என்றால் சிறு குழப்பம் இருக்கும். எப்படி இருந்தாலும் நாம் முன்னோக்கி பயணிப்போம்.” -என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...