mano ganesan
செய்திகள்அரசியல்இலங்கை

சீனா கைவிட்டதை இந்திய அரசாங்கம் முன்னெடுக்க முன்வர வேண்டும்

Share

சீனாவால் இடைநிறுத்தப்பட்ட சூரிய சக்தி மின் நிலையங்களை நிர்மாணிப்பது தொடர்பான செயற்றிட்டத்தை அதே வடக்கு தீவுகளில் முன்னெடுக்க இந்தியா உடனடியாக முன்வர வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்குபோதே இவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசு இலங்கை அரசுடன் இது சார்ந்து பேச வேண்டும். இதற்கு இலங்கை அரசாங்கமும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

சுத்தமான மின்சாரம் நம் நாட்டுக்கு தேவை என்பதை அவர் வலியுறுத்தினார். சீனா இங்கு இடை நிறுத்திய திட்டத்துக்கு பதிலாக அதனை மாலைத்தீவில் 12 தீவுகளில் முன்னெடுக்க அந்நாட்டு அரசுடன் உடன்பட்டு விட்டது.

இந்தியாவின் ஆட்சேபனை காரணமாக இத்திட்டம் இலங்கையில் பல மாதங்களுக்கு முன்னரே இடைநிறுத்தப்பட்டு விட்டது.

இத்தகவலை நம் நாட்டின் நிதி அமைச்சர் புது டில்லி சென்றிருக்கும் தருணத்தில் சீன தூதரகம் வெளியிட்டுள்ளது. இதன் பின்னணி என்னவென்று தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கையில் வடக்கிலுள்ள தீவுகளில் இந்திய அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கி சிபாரிசு செய்யும் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...