SELVAM
செய்திகள்இலங்கை

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்! – செல்வம் எம்.பி கோரிக்கை

Share

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.

மன்னாரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அத்தனை அம்சங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்கான அழுத்தத்தை இந்தியா பிரயோகிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

அதிகாரமற்ற மாகாணசபை ஊடாக எமது நிலத்தை பாதுகாக்க முடியாது. மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க இயலாது. எனவே, 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்பு, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதே சாலச்சிறந்தது.” – என்றும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
rajeshson 1748521947 6838657a8a2b0
சினிமாசெய்திகள்

அப்பாவோட முதல் ஆசை இது தான்..! கதறி அழும் ராஜேஷ் மகன்..

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். இந்த செய்தி...

25 6837f0f14edd7 6837fc6550cbf
சினிமாசெய்திகள்

சபேசனை வெளியேற்றினால் ஜீ தமிழுக்கு லாபமா? சரிகமப மேடையால் எழும் விவாதங்கள்.!

தமிழ் இசை நிகழ்ச்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் பெரும் பங்கு வகித்து வருவது...

25 14
இலங்கைசெய்திகள்

நாட்டில் இன்று 50ஆவது துப்பாக்கி சூடு

பாணந்துறையில் இன்று(29.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் நாட்டில் இந்த வருடம் மாத்திரம் 50 துப்பாக்கிச்...

17485380600
சினிமாசெய்திகள்

மூன்று முடிச்சு சீரியல் நடிகைக்கு புற்றுநோய்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மூன்று முடிச்சு’ சீரியலில் அக்கா வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை தீபிகா,...