Pointpedro
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களுக்கு விடுதலை!

Share

கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த மீனவர்கள் அனைவரும் ஒரு சில நாட்களில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் அண்மையில் 23 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இபருத்தித்துறை நீதவான் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த மீனவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவித்த பருத்தித்துறை நீதிமன்றம், அதனை ஓராண்டுக்கு ஒத்திவைத்தத்துடன் நிபந்தனைகளுடன் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் அதில் இருந்த மீன்பிடி உபகரணங்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் கொழும்பில் உள்ள மீரீஹானா முகாமில் தங்க வைக்கப்பட்டு ஒரு சில நாட்களில் விமானம் மூலம் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...