Pointpedro
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களுக்கு விடுதலை!

Share

கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த மீனவர்கள் அனைவரும் ஒரு சில நாட்களில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் அண்மையில் 23 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இபருத்தித்துறை நீதவான் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த மீனவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவித்த பருத்தித்துறை நீதிமன்றம், அதனை ஓராண்டுக்கு ஒத்திவைத்தத்துடன் நிபந்தனைகளுடன் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் அதில் இருந்த மீன்பிடி உபகரணங்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் கொழும்பில் உள்ள மீரீஹானா முகாமில் தங்க வைக்கப்பட்டு ஒரு சில நாட்களில் விமானம் மூலம் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 215
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு: குற்றப் பிரமுகரின் சகோதரர் உயிர் தப்பினார்!

அஹுங்கல்லா பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘லோக்கு பட்டி’ என்பவரின் சகோதரரான ‘பொடி பட்டி’...

world 217
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விடுமுறை முடிந்து கொழும்பு திரும்புவோருக்காக விசேட இரயில் சேவைகள் அறிவிப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தனது சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டு மீண்டும் கொழும்பு திரும்பும்...

world 214
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்பாட்டுப் புத்தக விநியோகம் ஆரம்பம்!

இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவங்களுக்குரிய செயல்பாட்டுப் புத்தகங்களை...