Pointpedro
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களுக்கு விடுதலை!

Share

கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த மீனவர்கள் அனைவரும் ஒரு சில நாட்களில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் அண்மையில் 23 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இபருத்தித்துறை நீதவான் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த மீனவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவித்த பருத்தித்துறை நீதிமன்றம், அதனை ஓராண்டுக்கு ஒத்திவைத்தத்துடன் நிபந்தனைகளுடன் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் அதில் இருந்த மீன்பிடி உபகரணங்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் கொழும்பில் உள்ள மீரீஹானா முகாமில் தங்க வைக்கப்பட்டு ஒரு சில நாட்களில் விமானம் மூலம் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....