1
செய்திகள்உலகம்

தீயில் கருகிய தமிழ் குடும்பம் -பரிதாபமாக 4 பேர் சாவு!!

Share

இலங்கையை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி பரிதாபமாக சாவடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இலங்கையர்கள் தீயில் கருகி சாவடைந்துள்ளனர் .

இளம் தாய், அவரது 4,1 வயதான குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகியோரே சாவடைந்துள்ளனர் .

தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களது வீடு தீப்பற்றியதும், இளம் தாய், தனது கைத்தொலைபேசி செயலிழப்பதற்கு முன்னதாக, கணவரை தொடர்பு கொண்டு, ‘நெருப்பு… நெருப்பு’ என கதறியுள்ளார்.

அதனையடுத்து தீயணைப்பு படையினர் அங்கு சென்ற போதும் , வீட்டிலிருந்த 4 பேரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

சாவடைந்த இளம் தாயின் சகோதரன், மேல் மாடியிலிருந்து குதித்து தப்பிய போது அவரின் கால்கள் உடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டர்.

தனது மனைவி, 4,1 வயதுடைய பிள்ளைகள், மாமியாரை பறிகொடுத்த கணவன், தீயில் கருகிய வீட்டின் முன்பாக கதறியழுது, சரிந்து விழுந்த காட்சிகளை பிரித்தானிய ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன.

இச்சம்பவத்தல் அக்குடியிருப்பு சோகத்தில் மூழ்கியுள்ளது.

இக்குடும்பத்தினர் அந்த வீட்டை 3 மாதங்களின் முன்னர்தான் கொள்வனவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாவடைந்த இளம் தாயின் தாயார் இன்று இலங்கைக்கு திரும்பவிருந்தா நிலையில் அவரது பயண பொதிகளை கட்டிக் கொண்டிருந்த போது, இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக இங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனினும், தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது இதுவரை உறுதியாகவில்லை.

குழந்தைகள் இருவரும் படுக்கையிலேயே சாவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சாவடைந்தவர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வெளியில் சோகத்தில் உறைந்துள்ளார்கள் அத்தோடு அந்த பகுதி மக்களும் அவ் வீட்டுக்கு முன் மலரஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...