1
செய்திகள்உலகம்

தீயில் கருகிய தமிழ் குடும்பம் -பரிதாபமாக 4 பேர் சாவு!!

Share

இலங்கையை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி பரிதாபமாக சாவடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இலங்கையர்கள் தீயில் கருகி சாவடைந்துள்ளனர் .

இளம் தாய், அவரது 4,1 வயதான குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகியோரே சாவடைந்துள்ளனர் .

தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களது வீடு தீப்பற்றியதும், இளம் தாய், தனது கைத்தொலைபேசி செயலிழப்பதற்கு முன்னதாக, கணவரை தொடர்பு கொண்டு, ‘நெருப்பு… நெருப்பு’ என கதறியுள்ளார்.

அதனையடுத்து தீயணைப்பு படையினர் அங்கு சென்ற போதும் , வீட்டிலிருந்த 4 பேரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

சாவடைந்த இளம் தாயின் சகோதரன், மேல் மாடியிலிருந்து குதித்து தப்பிய போது அவரின் கால்கள் உடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டர்.

தனது மனைவி, 4,1 வயதுடைய பிள்ளைகள், மாமியாரை பறிகொடுத்த கணவன், தீயில் கருகிய வீட்டின் முன்பாக கதறியழுது, சரிந்து விழுந்த காட்சிகளை பிரித்தானிய ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன.

இச்சம்பவத்தல் அக்குடியிருப்பு சோகத்தில் மூழ்கியுள்ளது.

இக்குடும்பத்தினர் அந்த வீட்டை 3 மாதங்களின் முன்னர்தான் கொள்வனவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாவடைந்த இளம் தாயின் தாயார் இன்று இலங்கைக்கு திரும்பவிருந்தா நிலையில் அவரது பயண பொதிகளை கட்டிக் கொண்டிருந்த போது, இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக இங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனினும், தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது இதுவரை உறுதியாகவில்லை.

குழந்தைகள் இருவரும் படுக்கையிலேயே சாவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சாவடைந்தவர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வெளியில் சோகத்தில் உறைந்துள்ளார்கள் அத்தோடு அந்த பகுதி மக்களும் அவ் வீட்டுக்கு முன் மலரஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...