litro 1
செய்திகள்அரசியல்இலங்கை

இடைநிறுத்தப்பட்ட கேஸ் சிலிண்டர் விநியோகம்!!

Share

நாடாளாவிய ரீதியில் தொடர் எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் மறுஅறிவித்தல் வரும் வரையில் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நேற்று(02)  முதல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த காலங்களில் தொடர்ந்து எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையிலேயே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நேற்று முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை சமையல் எரிவாயு விநியோகத்தை இவ்வாறு நிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் சரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறிவருகின்றன. நேற்றும் பல இடங்களில் சம்பவங்கள் பதிவாகின.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே லிட்ரோ கேஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...