army 720x375 1
செய்திகள்இலங்கை

யாழ். கொக்குவில் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு!

Share

யாழ். கொக்குவில் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்றையதினம் யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சமீப காலமாக யாழ்ப்பாணத்தில்இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் அந்த
இடங்களில் பதுங்கியிருகின்றனர் என யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிவரை பொலிஸார் மற்றும் நூற்றுக்கும் அதிகமான இராணுவத்தினர் கொக்குவிலின் ஒரு பகுதி சுற்றிவளைக்கப்பட்டது. சந்தேகத்துக்கிடமான வீடுகளில் தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதென சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...